காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரி சோதனை

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத் தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான ஏ.ஜே. தாமஸ் வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வரும் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் பணம் பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வருமான வரித்துறையினர், அரசு ஒப்பந்ததாரர்கள் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் கம்மாத்தி அருகே உள்ள தமிழ்நாடு வணிகர் சங்க மாநில துணைத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான ஏ.ஜே தாமஸ் வீட்டில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை துவங்கிய இந்த சோதனையானது கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக வருமான வரி மற்றும் சொத்து உள்ளிட்ட விபரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Next Story