குண்டடம் வாரச்சந்தையில் மாடுகள் வரத்து அதிகரிப்பு: விலை கடும் வீழ்ச்சி

குண்டடம் வாரச்சந்தையில்  மாடுகள் வரத்து அதிகரிப்பு: விலை கடும் வீழ்ச்சி
X

விற்பனைக்கு வந்த மாடுகள்

குண்டடம் வாரச்சந்தையில் தீவனப் பயிர் பற்றாக்குறையால் மாடுகள் வரத்து அதிகரித்து விலை கடும் வீழ்ச்சி அடைந்தது.

குண்டடம் வாரச்சந்தையில் சனிக்கிழமை தோறும் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை குண்டடம் மாட்டுச்சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு குண்டடம், காங்கயம், தாராபுரம், ஊதியூர், மடத்துக்கு ளம், பல்லடம், பூளவாடி, குடிமங்க லம்உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியா பாரிகள் விற்பனைக்காக மாடுகள், வளர்ப் புக் கன்றுகள், காளைகன்றுகளை கொண்டு வருகின்றனர்.

ஈரோடு, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, கேரளா, ஊட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் செல்கின்றனர். வாரம்தோறும் சுமார் 2 ஆயிரம் மாடுகள் இங்கு விற்ப னைக்கு வருகின்றன. ஆனால் பெருமளவு இறைச்சிக்கு செல்லும் மாடுகள் கேரளா, ஊட்டி போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் இப்பகுதியில் மழை பொய்த்து போனதால் கால்நடைகளை வளர்க்க முடியாமல் அதிக அளவில் விற் பனை செய்து வருகின்றனர். இதனால் விற்பனைக்காக சந்தைக்கு மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளதால் இந்த வாரம் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. அதே நேரத்தில் வளர்ப்பு மாடுகள் மற்றும் கிடே ரிகளை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த வாரங்களில் ரூ.40 ஆயிரம் வரை விலை போன கறவை மாடுகள் இந்த வாரம் ரூ.30 ஆயிரம் வரையே விலைபோ னது. ரூ.20 ஆயிரம் வரை விலைபோன வளர்ப்புக் கிடேரிகள் இந்த வாரம் ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவாகவே விலை போனது.

இதுபற்றி வியாபாரிகள் தரப்பில் கூறும்போது, வழக்கமாக வறட்சி சீசனில் மாடுகள் விலை குறைவாகத்தான் இருக் கும். பருவமழை தொடங்கினால் விலை கூடும் என்றனர்

Tags

Next Story