திண்டுக்கல்லில் இரவு நேரங்களில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு

திண்டுக்கல்லில் இரவு நேரங்களில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு

இரவில் சுற்றி திரிந்த நாய்கள்

திண்டுக்கல்லில் இரவு நேரங்களில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் நகர் தேர்தலில் இரவு நேரங்களில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. நடந்து செல்லும் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமப்படுகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் நாய்கள் பல்கி பெருகி உள்ளன.

திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் நாய்களைப் பிடித்த போதும் கட்டுப்படுத்த முடியவில்லை. கு.க. ஆபரேஷன் செய்வதாக கூறிக் கொள்ளும் மாநகராட்சியில் நாய்கள் தொல்லை தினமும் அதிகரித்துள்ளது.

திண்டுக்கல், கிழக்கு கோவிந்தாபுரம், நாயக்கர் புது 3வது தெரு பகுதி சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக உள்ளது. தெரு நாய்களின் ஆலோசனை கூட்டமா என அப்பகுதியை கடக்கும் மக்கள் அச்சத்துடன் கேள்வி எழுப்பி செல்கின்றனர்.

நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story