வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - பொதுமக்கள் கடும் அவதி

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு -  பொதுமக்கள் கடும் அவதி

பைல் படம் 

தூத்துக்குடியில் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் கடும் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் காலை 11 மணிமுதல் மாலை 3 மணிவரை அனல்காற்று வீசுவதால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்களில் தூத்துக்குடி முத்துநகா் கடற்கரை காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும். அதன்படி, ஞாயிற்றுக்கிழமையில் முத்துநகா் கடற்கரையில் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால், வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால், பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் முத்துநகா் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

Tags

Next Story