மல்லிகைப்பூ விலை கடும் உயர்வு
சங்கரன்கோவிலில் இன்று மல்லிகைப்பூ விலை உயர்ந்த நிலையில், கிலோ ரூ.3000க்கு விற்பனையானது.
சங்கரன்கோவிலில் இன்று மல்லிகைப்பூ விலை உயர்ந்த நிலையில், கிலோ ரூ.3000க்கு விற்பனையானது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவு மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு மல்லி, பிச்சி, கேந்தி, சம்மங்கி உள்ளிட்ட மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது, பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூ வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலையில், நாளை சுபமுகூர்த்ததினம் என்பதால் இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரகம் ரூ. 3000க்கு விற்பனை செய்யப்பட்டது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story