தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியில் விலை அதிகரிப்பு

தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடுகளின் வரத்து சரிவால் விலை அதிகரித்து விற்பனை நடைபெற்றது.
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். உற்பத்தி குறைந்ததால் இந்த அங்காடிக்கு கடந்த சில வாரங்களாக பட்டுக்கூடு வரத்து குறைந்து வருகிறது. வரத்து குறைந்த போதும் தரத்தின் அடிப்படையில் பட்டுக்கூடுகளின் விலை அதிகரித்தது.நேற்று ஒரு கிலோவிற்கு 61 ரூபாய் விலை அதிகரித்தது. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிக பட்சமாக 626 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக 589 ரூபாய்க்கும், சராசரியாக 607.83 ரூபாய்க்கும் விற்பனையானது.மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரத்து 875 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story