தர்மபுரியில் பட்டுக் கூடுகளின் விலை அதிகரிப்பு

தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடுகளின் விலை அதிகரித்துள்ளது.
தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். பட்டுக்கூடு சாகுபடி குறைந்ததால் இந்த அங்காடிக்கு கடந்த சில வாரங்களாக பட்டுக்கூடு வரத்து மிகவும் குறைந்தது. பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 668 கிலோவாக குறைந்தது. பட்டுக்கூடுகள் நேற்று கிலோவிற்கு 19 ரூபாய் அதிகரித்தது. 1 கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக 630 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக 250 ரூபாய்க்கும், சராசரியாக 516.95 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 402 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story