தர்மபுரியில் பட்டுக்கூடுகளின் விலை அதிகரிப்பு

தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பட்டுக்கூடுகளின் விலை அதிகரிப்பு
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் நான் ஒரு பகுதியில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 551 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 708 கிலோவாக அதிகரித்தது. நேற்று முன்தினம் 1 கிலோ 572 ரூபாய்க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு 28 ரூபாய் அதிகரித்தது. 1 கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக 600 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 332 ரூபாய்க்கும், சராசரியாக 488.41 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 944 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டன.

Tags

Next Story