தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியில் விற்பனை அதிகரிப்பு

தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் செயல்படும் அரசு பட்டுக்கூடு அங்காடியில் 13.46 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் தமிழக பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். பட்டுக்கூடுகள் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக இந்த அங்காடிக்கு நேற்று பட்டுக்கூடுகள் வரத்து கணிசமாக அதிகரித்தது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று தர்மபுரி அங்காடிக்கு 2,823 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று ஒரு கிலோ உ பட்டுக்கூடு அதிகபட்சமாக 555 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 210 ரூபாய்க்கும், சராசரியாக 476.82 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 13 லட்சத்து 46 ஆயிரத்து 241 மதிப்பில் பட்டுக் கூடுகள் விற்பனை செய்யப்பட்டன.

Tags

Next Story