காரிமங்கலம் வாரச்சந்தையில் தேங்காய் விற்பனை அதிகரிப்பு

காரிமங்கலம் வாரச்சந்தையில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் தேங்காய்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் 12 லட்சத்திற்கு தேங்காய் விற்பனையானது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் பிற்பகலில் தேங்காய்கள் விற்பனைக்காக பிரத்தியேகமாக வார சந்தை நடைபெற்று வருவது வழக்கமாகும். நேற்று நடைபெற்ற தேங்காய் வாரச் சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் தேங்காய் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அளவைப் பொறுத்து தேங்காய்கள் 7 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது மேலும் கோவில் திருவிழாக்கள் அதிகளவில் நடைபெற இருப்பதினால் தேங்காய் விற்பனை அதிகரித்து காணப்பட்டது நேற்று ஒரே நாளில் 12 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story