பாபநாசம் அருகே வரத்து அதிகரிப்பு: கத்திரிக்காய் விலை சரிவு

பாபநாசம் அருகே வரத்து அதிகரிப்பு: கத்திரிக்காய் விலை சரிவு

கத்திரிக்காய் தோட்டம்

பாபநாசம் அருகே வரத்து அதிகரிப்பு காரணமாக விலை சரிவு அடைந்த கத்திரிக்காய்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வரத்து அதிகரிப்பு காரணமாக விலை சரிவு அடைந்த கத்திரிக்காய். அறுவடை செய்யாமல் செடியிலே விட்டு வைத்த சம்பவம் விவசாயிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலத்தில் அதிகளவில் கத்திரிக்காய் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தாயரான நிலையில் உள்ளது. தினசரி காய்கறிகள் சந்தைகளில் கத்திரிக்காய் வரத்து அதிகரிப்பு காரணமாக விலை சரிவு அடைந்துள்ளதாக விவசாயிகள் மத்தியில் கூறப்படுகிறது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கத்திரிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை ஆகுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அறுவடைக்கு தயாரான நிலையிலும் விவசாயத்தில் போதிய இலாபம் கிடைக்காத காரணத்தால் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட கத்திரிக்காய் அறுவடை செய்யாமல் செடியிலே விட்டு வைத்த சம்பவம் பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story