தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடுகளின் வரத்து அதிகரிப்பு

தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடுகளின் வரத்து அதிகரிப்பு

விற்பனைக்கு வந்த பட்டு கூடுகள்

தர்மபுரி உழவர் சந்தை அருகே அரசு பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடுகளின் வரத்து அதிகரித்துள்ளது.

தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியில் இன்று தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் 59 விவசாயிகள் 2022 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் அதிகபட்ச பட்டுக்கூடு ஒரு கிலோ 523 ரூபாய், சராசரியான பட்டுக்கூடு ஒரு கிலோ 443 ரூபாய், குறைந்தபட்ச பட்டுக்கூடு ஒரு கிலோ 307 ரூபாய்கும் பட்டுக்கூடுகள் விற்பனையானது இன்று 8 லட்சத்து 96 ஆயிரத்து 498 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

இனிவரும் காலங்களில் பட்டுக்கூடு வர்த்தகம் அதிகரிக்கும் என்று பட்டுக்கூடு அலுவலர் தெரிவித்தார்.

Tags

Next Story