சாத்துக்குடி வரத்து அதிகரிப்பு - விலை வீழ்ச்சி !!

சாத்துக்குடி வரத்து அதிகரிப்பு - விலை வீழ்ச்சி !!

சாத்துக்குடி

காஞ்சிபுரம் வீதிகளில், நடமாடும் வாகனங்களில் 2 கிலோ சாத்துக்குடி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தில் விளையும் சாத்துக்குடி, கோயம்பேடு மார்க்கெட் வாயிலாக காஞ்சிபுரத்திற்கு வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன், காஞ்சிபுரத்தில் கிலோ சாத்துக்குடி, 100 - 120 ரூபாய் வரை விற்றது. தற்போது ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் விளைச்சல் அதிகரித்து, வரத்து அதிகரித்துள்ளது. இதனால், காஞ்சிபுரம் வீதிகளில், நடமாடும் வாகனங்களில் 2 கிலோ சாத்துக்குடி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், பொதுமக்கள் கிலோ கணக்கில் சாத்துக்குடி வாங்கிச் செல்கின்றனர்.

Tags

Next Story