ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு இன்று காலை நிலவரப்படி 1000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 17 நாட்களாக நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 200 கன அடி வீதம் நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. இதனால் பல்வேறு இடங்களில் பாறைகளாக காணப்பட்டிருந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது இதனால் வினாடிக்கு 2500 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது மேலும் நேற்று முன்தினம் 800 கன அடியாக சரிந்து வந்து நிலையில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,000 கனஅடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கோடை காலம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் உடல் சூட்டை தணிக்க ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க வருவது வழக்கம் எனவே நீர் வரத்து சரிந்தால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் குறைய வாய்ப்புள்ளதாக பரிசல் ஒட்டிகள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story