சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு - குளிக்க தடை

சுருளி அருவியில்  நீர் வரத்து அதிகரிப்பு - குளிக்க தடை

சுருளி அருவி 

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி தேனி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். சுருளி அருவிக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காகவும், இல்லங்கள் மற்றும் கோவில்களுக்கு தேவையான புனித நீர் எடுப்பதற்காகவும், மற்றும் சுருளி அருவியில் ஆனந்தமாய் குளிப்பதற்காகவும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை வேலையில் மழை பெய்து வருகிறது அதன்படி சுருளி அருவியின் நீர்வரத்து பகுதிகளில் நேற்று பெய்த மழையினால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுருளி அருவியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். தொடர்ந்து அருவி பகுதியில் வனத்துறையினர் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் அருவியல் நீர் வரத்து குறைந்த பின்பு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்

Tags

Next Story