மிதமான மழையால் அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

மிதமான மழையால் அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

நெல்லையில் மலைப்பகுதிகளில் மிதமான மழை பெய்ததால், நீர்மட்டம் அதிகரித்த நிலையில் பாபநாசம் அணையில், நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

நெல்லையில் மலைப்பகுதிகளில் மிதமான மழை பெய்ததால், நீர்மட்டம் அதிகரித்த நிலையில் பாபநாசம் அணையில், நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, மாஞ்சோலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கும் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்தின் காரணமாக பாபநாசம் அணையில் இன்று 04/01/24 காலை நிலவரப்படி 1646.95 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது. மணிமுத்தாறு அணையில் 1055 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது. தொடர்ந்து மழையும் நீர்வரத்தும் அதிகரித்தால் நீர் திறப்பும் அதிகரிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story