திமுக ஆட்சியில் மின்வெட்டு அதிகரிப்பு: முன்னாள் அமைச்சர்

திமுக ஆட்சியில் மின்வெட்டு அதிகரிப்பு: முன்னாள் அமைச்சர்

கூட்டத்தில் பேசும் முன்னாள் அமைச்சர் 

திமுக ஆட்சி வந்தவுடன் மின்வெட்டும் மின் கட்டணமும் அதிகரித்து கொண்டே வருகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயல்லிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பெருந்துறையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சரும் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான கே.சி.கருப்பணன்கலந்து கொண்டு பேசினார்.அப்போது எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் தான் உலகமே பாராட்டும் சத்துணவு திட்டம் கொண்டு வரப்பட்டது.எம்ஜிஆர் தான் தமிழ்நாடு முழுவதும் பசுவை அறிமுகம் செய்தார். திமுக ஆட்சியில் அதிமுகவின் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு-அத்திக்கடவு அவினாசி 1600 கோடி திட்டம் கொண்டுவந்தது.எடப்பாடி திறமை யாருக்கும் இல்லை.இரண்டு மூன்று தேர்தலுக்கு பிறகு வாக்கு செலுத்த பூத்திற்கு செல்லவேண்டியது இருக்காது என்றும் இருந்த இடத்திலேயே சொல்லியே வாக்கு செலுத்தும் முறை வந்துவிடும் என்றார்.

Tags

Next Story