சுயேச்சை வேட்பாளரின் காா் கண்ணாடி சேதம்

திண்டுக்கல்லில் சுயேச்சை வேட்பாளரின் கார் கண்ணாடி உடைத்து சேதப்படுத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை செய்தனர்.

திண்டுக்கலில் வேட்பாளர் கார் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் ஆண்டிமடம் ஆறுமுகசாமியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு இரண்டு சொகுசு கார்களில் வந்த மர்ம நபர்கள் சுயேச்சை வேட்பாளர் ஆறுமுகம் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டவேரா வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சென்றுள்ளனர்.

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால் பயத்தினை காட்டுவதற்காக இப்படி செய்துள்ளார்கள் என சுயேச்சை வேட்பாளர் ஆறுமுகம் பேட்டி அளித்தார். தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்யை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story