அம்பேத்கர் சிலைக்கு இந்தியா கூட்டணி கட்சியினர் மாலை அணிவிப்பு

அம்பேத்கர் சிலைக்கு இந்தியா கூட்டணி கட்சியினர் மாலை அணிவிப்பு

அம்பேத்கர் சிலை

நாகர்கோவிலில் அம்பேத்கர் சிலைக்கு இந்தியா கூட்டணி கட்சியினர் மாலை அணிவிப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வடசேரி, அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே டாக்டர் அம்பேத்கரின் உருவ சிலை உள்ளது. இன்று அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சியினர், அமைப்பினர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்பேத்கர் சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் நகராட்சி மேயருமான மகேஷ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயவசந்த், மார்க்சிஸ்ட் செயலாளர் உசேன், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், திமுக ஒன்றிய செயலாளர் மதியழகன் மற்றும் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story