இந்தியா கூட்டணி வெற்றி; குளச்சலில் கொண்டாட்டம்

இந்தியா கூட்டணி வெற்றி; குளச்சலில் கொண்டாட்டம்

பாராளுமன்றத் தேர்தலில் குமரி காங்., வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் விளங்கோடு இடைத்தேர்தலில் தாரகை கத்பட் ஆகியோரின் வெற்றியை கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர்.

பாராளுமன்றத் தேர்தலில் குமரி காங்., வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் விளங்கோடு இடைத்தேர்தலில் தாரகை கத்பட் ஆகியோரின் வெற்றியை கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர்.

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றதையும், கன்னியாகுமரி லோக்சபா காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தாரகை கத்பட் ஆகியோர் வெற்றி பெற்றதை முன்னிட்டு குளச்சல் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

குளச்சல் அண்ணா சிலை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளர் நாகூர் கான தலைமையிலும், காமராஜர் பஸ் நிலையத்தில் நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர் தலைமையிலும், குளச்சல் பீச் சந்திப்பில் மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் ஸ்டாலின் தலைமையிலும் கூட்டணியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சிகளில் நகர் மன்ற தலைவர் நசீர், மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் யூசுப் கான், உட்பட பலர் இந்தியா கூட்டணி வெற்றி; குளச்சலில் கொண்டாட்டம்

கலந்து கொண்டனர்.

Tags

Next Story