டெல்லி முதல்வர் கைது கண்டித்து இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம் 

டெல்லி முதல்வர் கைது கண்டித்து இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம் 

கண்டன ஆர்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆம் ஆத்தி கட்சி சார்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆம் ஆத்தி கட்சி சார்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்தும், ஆளும் பாஜக அரசின் கை பாவையாக விளங்கும் அமலாக்க துறையின் செயலை கண்டிக்கும் விதமாகவும் இன்று இண்டிய கூட்டணி சார்பில் நாகர்கோவில்,வேப்பமூடு பார்க் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உடனடியாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆம்ஆத்மி தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மேயருமான மகேஷ் உள்ளிட்ட ஏராளமான இண்டிய கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story