இந்திய மாதர் சங்கம் விழிப்புணர்வு பிரசாரம்

இந்திய மாதர் சங்கம் விழிப்புணர்வு பிரசாரம்

விழிப்புணர்வு பிரச்சாரம் 

திருமருகலில் பெண்கள் மீதான வன்முறைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி இந்திய மாதர் சங்கத்தினர் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் இந்திய மாதர் சங்கம் திருமருகல் ஒன்றியம் சார்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ஜூடி, ஒன்றிய தலைவர் மகேஸ்வரி ஆகியோர் தலைமை தாங்கி பெண்கள் மீதான வன்முறைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர்,மாவட்ட பொருளாளர் பாபுஜி,ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ்,ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story