இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

கள்ளச்சாராயத்தை ஒழித்திட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கள்ளச்சாராயத்தை ஒழித்திட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்ற நிலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதையும் மீறி கள்ளச்சாராயம் விற்பனை என்பது அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை ஆதரவு இல்லாமல் நடக்க வாய்பில்லை.

இது தமிழ்நாட்டில் சமூக விரோத செயல்கள் அதிகரிக்கவும் சட்டம் ஒழுங்கு பாதிப்பை உருவாக்கவும் காரணமாக அமையும். எனவே அரசு உடனடியாக கள்ளச்சாராய கும்பலை கைது செய்ய வேண்டும். இதனால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும். கள்ளச்சாராயம் குறித்த விழிப்புணர்வை தன்னார்வக் குழுக்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ள வேண்டும் அனைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையிலும் குழுக்கள் அமைத்து போர்க்கால அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தினர்.

Tags

Next Story