சேலத்தில் வருகிற 15ஆம் தேதி பாரத பிரதமர் மோடி வருகை தர உள்ளார்

சேலத்தில் வருகிற 15ஆம் தேதி பாரத பிரதமர் மோடி வருகை தர உள்ளார்

பிரதமர் மோடி

மோடி வருவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
சேலத்திற்கு வரும் 15ம் தேதி பிரதமர் மோடி வருகை தருகிறார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி அவர் வரும் 15ம் தேதி சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை பாஜ நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இதுகுறித்து பாஜமாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறியதாவது: பிரதமர் மோடி வரும் 15ம் தேதி காலை 11 மணிக்கு சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி தாமரை திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். சேலம், நாமக்கல், கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள் இடையே பேச உள்ளார். சேலம் வரும் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில், மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர் முருகன் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு கே.பி.ராமலிங்கம் கூறினார். இதையடுத்து சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பொது கூட்ட இடத்தை பாஜக நிர்வாகிகள் பார்வையிட்டனர். அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Next Story