இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகிகள் மாநாடு

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி  நிர்வாகிகள் மாநாடு

அழைப்பிதழ் வழங்கிய நிர்வாகிகள்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகிகள் மாநாடு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் திருப்பூரில் வருகின்ற புதன்கிழமை மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தேசிய தலைவர் காதர் மொய்தீன், திமுக எம்பி ராஜா, மற்றும் வக்ஃபு வாரிய தலைவர், முக்கிய பிரமுகர்கள், மாநிலத் தலைவர்கள் என பல கலந்து கொள்கின்றனர்.

இதனை முன்னிட்டு பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகிகள் அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர். அதன்படி கூட்டணி கட்சி கொங்கு நாடு கட்சி தலைவர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்களிடமும், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் எம்பி ஏ. கே. பி. சின்னராஜ் , அவர்களிடமும் மற்றும் ராசிபுரம் திமுக நகர கழக செயலாளர் என்.ஆர். சங்கர் , ஆகியோர் இடம் மாநாட்டுக்கு வருமாறு மாவட்ட துணை தலைவர் எம் .காதர் ஷரிப், எ. பண்டு, நகர தலைவர் ராஜா, நகர பொருளாளர் மஸ்தான் அலி, நகர துணை செயலாளர் பொத்து, நகர துணை செயலாளர் நிசார், உள்ளிட்டோர் நேரில் சென்று அழைப்பிதழ்கள் கொடுத்து முக்கிய நிர்வாகிகளை அழைத்தனர்.

தொடர்ந்து இதே போல் பல்வேறு இடங்களில் அழைப்பிதழ்கள் வழங்கி வருகின்றனர்.

Tags

Next Story