இந்திரா காந்தி நினைவு நாள் - காங்கிரஸ் கட்சியினர் மரியாதை

இந்திரா காந்தி நினைவு நாள் - காங்கிரஸ் கட்சியினர் மரியாதை

திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை 

தஞ்சாவூரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள், சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது . மாநகர மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அதன் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்து, இந்திரா காந்தி, வல்லபபாய் படேல் ஆகியோர் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்கள் ஏ. ஜேம்ஸ், வயலூர் எஸ். ராமநாதன், மாநகர மாவட்டத் துணைத் தலைவர் ஜி.லட்சுமி நாராயணன், பொருளாளர் ஆர். பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடை பெற்ற இந்நிகழ்வுக்கு துணைத் தலைவர் கோ. அன்பரசன் தலைமை வகித்தார். இதில், இந்திரா காந்தி படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சிங்காரம், மாவட்டப் பொதுச்செயலாளர்கள் என்.மோகன் ராஜ், ஆண்டவர், மாநில பொதுக் குழு உறுப்பினர் கண்டிதம்பட்டு ஆர்.கோவிந்தராஜ், வட்டாரத் தலைவர் நாராயணசாமி, சிவாஜி சமூக நல பேரவைத் தலைவர் சதா. வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story