பொது குடிநீர் குழாயை பயன்படுத்தும் தனிநபர் - நடவடிக்கை எடுக்கப்படுமா?

பொது குடிநீர் குழாயை பயன்படுத்தும் தனிநபர் - நடவடிக்கை எடுக்கப்படுமா?

சேதப்படுத்தப்பட்டுள்ள குடிநீர் குழாய்

கலவைப் பகுதியில் பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட பைப் லைனில் தனிநபர் பயன்படுத்தி வருவதாகவும், உரிய நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மேல்நெல்லி கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட பைப் லைனில், தனி நபர் ஒருவர் சொந்த பயன்பாட்டிற்காக சுமார் 1½ கிலோமீட்டர் தூரத்திற்கு பைப் லைனை துண்டித்து, மின் மோட்டாரை இணைத்து தண்ணீர் எடுத்து வருகிறார்.

தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீருக்காக தவித்து வரும் நிலையில் தனி நபர் பைப் லைனை பயன்படுத்துவதால் பொதுமக்கள் இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

உடனடியாக மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட அரசு துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story