லால்குடியில் சாலையை ஆக்கிரமித்து கடை கட்டிய தனி நபர்: நகராட்சி அதிரடி

லால்குடியில் சாலையை ஆக்கிரமித்து கடை கட்டிய தனி நபர்: நகராட்சி அதிரடி

சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடை

திருச்சி மாவட்டம் லால்குடி திருவள்ளுவர் நகர் செல்லும் முனையில் பொதுமக்கள் செல்லும் சாலையை ஆக்கிரமித்து கடை கட்டி வரும் தனிநபர் ஒருவர்.கடையை அகற்றிய நகராட்சி நிர்வாகம்.

திருச்சி மாவட்டம். லால்குடி திருவள்ளுவர் நகர் செல்லும் முனையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பூக்கடை நடத்தி வரும் தனிநபர் ஒருவர ஆக்கிரமித்து கடை கட்டி வருகிறார்.ஏற்கனவே அந்த இடத்தில் பேருந்துகள் வளைந்து செல்ல முடியாமல் இடையூறாக இருக்கும் பகுதியாகும் அங்கு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

பொதுமக்கள் செல்லும் பாதையை மறித்து தனிநபர் ஆக்கிரமித்து கடை கட்டுவது கண்டிக்கத்தக்கது.அங்கு கடை நடத்திவரும் அனைவரும் கட்டுப்பாட்டோடு தனது கடைகளை மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நடத்தி வருகிறார்கள். பூக்கடை நடத்தும் இவர் மட்டும் மக்களுக்கு இடையூறாக இருக்கிறார் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லால்குடி நகராட்சி ஆணையர் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதன்படி லால்குடி நகராட்சி ஆணையர் குமார் சாலையை ஆக்கிரமித்து அமைத்த கடையை அகற்றினார் உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையருக்கு பல்வேறு தரப்பினர் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story