திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் மின்தடையால் தொழில்கள் பாதிப்பு

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் மின்தடையால் தொழில்கள் பாதிப்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மின்தடையால் தொழில்கள் பாதிப்படைந்துள்ளன.


திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மின்தடையால் தொழில்கள் பாதிப்படைந்துள்ளன.

அவிநாசி பகுதியில் மின் தடையால் தொழில்கள் பாதிப்பு.தடையில்லா மின்சாரம் வழங்க கோரிக்கை! அவிநாசி பகுதியில் சிறு அளவிலான பணியன் நிறுவனங்கள், தச்சுப்பட்டறை, மர அறுவை ஆலைகள், கிரில் ஒர்க்ஷாப், மாவு அரைக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக அவிநாசி பகுதியில் தினமும் மின்சாரம் தடைபடுகிறது. இது குறித்து தொழில் முனைவோர் மற்றும் வியாபாரிகள் கூறுகையில் மின்சாரத்தை நம்பித்தான் அனைத்து தொழில்களும் செய்ய வேண்டி உள்ளது.

காலையில் தொழில் தொடங்கிய சிறிது நேரத்தில் விட்டு விட்டு மின்சாரம் தடைபடுகிறது. மின்சாரம் தடைப்படும் போது மீண்டும் இரண்டு மணி நேரத்துக்கு பிறகு தான் வருகிறது. இதனால் தொழில் செய்ய முடிவதில்லை. தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மின்சார துறை அதிகாரிகள் அவிநாசி பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story