தொற்றா நோய்க்கான சிகிச்சை முகாம்!

தொற்றா நோய்க்கான சிகிச்சை முகாம்!

நெமிலியை அடுத்த கீழாந்துறை ஊராட்சியில் தொற்றா நோய்க்கான சிகிச்சை முகாம் நடந்தது.


நெமிலியை அடுத்த கீழாந்துறை ஊராட்சியில் தொற்றா நோய்க்கான சிகிச்சை முகாம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழாந்துறை ஊராட்சியில் தொற்றா நோய்க்கான சிகிச்சை முகாம் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் மின்னல் ஒளி அம்பேத்ராஜ் தலைமை தாங்கினார். முகாமில் தொற்றா நோய்களான ரத்த அழுத்தம், இதய நோய்கள், நீரிழிவு நோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், காசநோய், தொழுநோய், நாள்பட்ட சிறுநீரக நோய், நுரையீரல் அடைப்பு உள்ளிட்டவைகளுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டு மருத்துவ அலுவலரால் சிகிச்சை பெறும் முறைகள் குறித்து விரிவான ஆலோசனை வழங்கப்பட்டது. தொடர்ந்து அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று அவ்வப்போது ஆலோசனைகள் பெற்றுக்கொள்ள நோயாளிகளுக்கு அறிவுறுத்தபட்டது.

Tags

Next Story