அரசு பட்டுக்கூடு அங்காடியில் வரத்து சரிவு

அரசு பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடு வரத்து சரிவை சந்தித்தது. நேற்று 11 லட்சத்து 61 ஆயிரத்து 665 ரூபாய்க்கு பட்டுக்கூடு விற்பனையானது.
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் சேலம், நாமக்கல், ஈரோடு,கிருஷ்ணகிரி,ஓசூர்,பெங்களூர், கோபி, திருவண்ணாமலை போன்ற பகுதியில் இருந்து 74 விவசாயிகள் 2772 கிலோ பட்டுக்கூடுகளை பட்டுக்கூடு அங்காடிக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் அதிகபட்ச பட்டுக்கூடு ஒரு கிலோ 496 ரூபாய் சராசரியாக பட்டுக்கூடு ஒரு கிலோ 419 ரூபாய் குறைந்தபட்ச பட்டுக்கூடு ஒரு கிலோ 318 ரூபாய் பட்டுக்கூடுகள் விற்பனையானது. மொத்தம் 11 லட்சத்து 61 ஆயிரத்து 665 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது. இனி வரும் காலங்களில் பட்டுக்கூடு வரத்து அதிகரிக்கும் என்று பட்டுக்கூடு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story