போலியோ சொட்டு மருந்து முகாம் துவக்கம்

திருவள்ளூர் அருகே இரா.கி. பேட்டையில் நடக்கும் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், இரா.கி. பேட்டை ஊராட்சி ஒன்றியம், இரா.கி. பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 1 முதல் 6 வயது உடைய குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் க. திபா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பிரியா ராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story