திருச்செங்கோடு நகராட்சியில் நலத்திட்ட பணிகள் துவக்கம்

திருச்செங்கோடு நகராட்சியில் நலத்திட்ட பணிகள் துவக்கம்

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

திருச்செங்கோடு நகராட்சியில் நலத்திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு நகராட்சிக்கு குடிதண்ணீர் வரும் மெயின் குழாய்கள் சீரமைக்கும் பணிகள் கூட்டப்பள்ளி பகுதியில் இருந்து மூலதன பங்களிப்பு நிதி ரூ. 2 கோடியே 83 லட்சத்தில் பூமி பூஜை செய்து துவக்கம்.

இதே போல் 32வது வார்டு பெரியார் நகர் பகுதியில் நகராட்சி பொது நிதி ரூ 13 லட்சம் மதிப்பீட்டில் 150 மீட்டர் நீளம் 4 மீட்டர் அகலம் கொண்ட தார்சாலை பணிகளை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் மண்டல நகரமைப்பு திட்டக் குழு உறுப்பினர் மதுரா செந்தில், நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில்நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுரேஷ் பாபு நகர் மன்ற துணைத் தலைவர்நகர திமுக செயலாளர் கார்த்திகேயன் நகராட்சி ஆணையாளர் சேகர்நகராட்சி பொறியாளர் சரவணன் நகர மன்ற உறுப்பினர்கள்சம்பூரணம், புவனேஸ்வரி உலகநாதன், திவ்யா வெங்கடேசன்,

செல்லம்மாள் தேவராஜன்,ராதா சேகர், செல்வி ராஜவேல்,அடுப்பு ரமேஷ் 32 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் அசோக்குமார்ஆகியோர் உள்ளிட்ட பகுதி பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் நகராட்சி அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story