காரிமங்கலத்தில் விபத்தில் காயம்: ஆறுதல் கூறிய முன்னாள் எம்எல்ஏ

காரிமங்கலத்தில் விபத்தில் காயம்: ஆறுதல் கூறிய முன்னாள் எம்எல்ஏ

காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய முன்னாள் எம்எல்ஏ 

காரிமங்கலம் பகுதியில் விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுகவினரை, திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இன்று மரக்காணம் பகுதியில் இருந்து தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் கன்னியப்பன் மற்றும் ஆற்காடு பகுதியில் இருந்து தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த ஐந்து கழக இளைஞர்கள் காரிமங்கலம் பகுதி அருகே பல்வேறு விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைந்து தருமபுரி மாவட்ட மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் ராகுல் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனை அடுத்து தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மருத்துவர்களிடம் உரிய மேல் சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் நடராஜ் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story