பெரியார் பல்கலைக்கழகத்தில் விசாரணை - பா.ம.க மாணவர் சங்கம் கோரிக்கை

பெரியார் பல்கலைக்கழகத்தில் விசாரணை -  பா.ம.க மாணவர் சங்கம் கோரிக்கை

மனு அளிக்க வந்த பாமக மாணவர் சங்கத்தினர் 

பாட்டாளி மாணவர் சங்க மாநில செயலாளர் வக்கீல் விஜயராசா நேற்று கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் ஒரு மனு கொடுத்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பெரியார் பல்கலைக்கழகத்தில் தனி நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது. இது குறித்து அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். விசாரணை செம்மையாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், தனியாக கல்வி அறக்கட்டளை தொடங்க காரணமான சம்பந்தப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். அதே போன்று பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்த வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தி தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். மனு அளிக்க ஒருங்கிணைந்த மாணவர் சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் அருண்குமார், மாநகர் மாவட்ட தலைவர் மோகன்ராஜ், செயலாளர் ரஞ்சித்குமார், வடக்கு மாவட்ட தலைவர் தர்மராஜ், துணை தலைவர்கள் வேலுசாமி, தினேஷ் உள்பட பலர் வந்திருந்தனர்.

Tags

Next Story