வடிகால்வாய் அமைக்க வலியுறுத்தல்

வடிகால்வாய் அமைக்க வலியுறுத்தல்

கான்கிரீட் வடிகால்வாய் அமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரத்தில் கான்கிரீட் வடிகால்வாய் அமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம் மாநகராட்சி உதயமாங்குளம் ஓரிக்கை மிலிட்டரி சாலையை ஒட்டியுள்ள பகுதியில், 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மழைநீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வடிகால்வாய் மண் கால்வாயாக உள்ளது. திறந்தவெளி மண் கால்வாய் என்பதால், இதில், மண்துகள் மற்றும் செடி, கொடிகளால் கால்வாய் துார்ந்துள்ளது இதனால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியில் வீட்டு வாசலில் தேங்குகிறது. பலத்த மழை பெய்தால், வீடுகளுக்குள் வெள்ளநீர் செல்லும் சூழல் உள்ளது. மேலும், ஒரே இடத்தில் தேங்கும் மழைநீரில் ஏடிஸ் - கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு பரவும் சூழல் உள்ளது. இதனால், மழைக்காலத்தில் இப்பகுதியினர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கால்வாயை முழுமையாக துார்வாரி, கான்கிரீட் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என உதயமாங்குளத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story