"மழைநீர் வடிகால்வாயில் குப்பை துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்"

மழைநீர் வடிகால்வாயில் குப்பை துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்


காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவில் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் "மழைநீர் வடிகால்வாயில் குப்பை துார்வாரி சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.


காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவில் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் "மழைநீர் வடிகால்வாயில் குப்பை துார்வாரி சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவில் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், இத்தெருவின் குறுக்கே வடிகால்வாய் உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால், கால்வாயில் செடி, கொடிகள் மண்டியுள்ளன. மேலும், சுற்றியுள்ள பகுதிவாசிகள் குப்பை கொட்டுவதால், கால்வாய் குப்பை தொட்டியாக மாறியுள்ளது. இதனால், மழைக்காலத்தில், இக்கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதி குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. எனவே, இக்கால்வாயை துார்வாரி, கால்வாயில் குப்பை கொட்டுவதை தடுக்க, கான்கிரீட் தளம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்."

Tags

Next Story