இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அலுவலர் ஆய்வு

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அலுவலர் ஆய்வு
ஆய்வு 
சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது இக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வளர்ச்சி பணிகள் செய்வதற்காக தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் விருந்தினர் மண்டபம், சுகாதார வளாகம், பேருந்து நிலையம், உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் (பள்ளி கல்வித்துறை செயலர்) ஜெ.குமரகுருபரன் ஆய்வு மேற்கொண்டார். நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் மேலும் தேவையான வளர்ச்சி பணிகள் குறித்தும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி அவர்களிடம் கலந்து ஆலோசித்தார். நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆய்வில் மதுரை இணை ஆணையர் கோவில் செயல் அலுவலர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் என பல கலந்து கொண்டனர். தை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர் அவர்களுடன் சிறப்பு பணி அலுவலரும் சாமி தரிசனம் செய்தார் அவருக்கு இருக்கங்குடி மாரியம்மன் கோவில் சார்பில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் முதல் மரியாதை செய்தார்.

Tags

Next Story