அம்மாபேட்டை ஊராட்சிகளில் ஆட்சியர் ஆய்வு

அம்மாபேட்டை ஊராட்சிகளில் ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டைஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் ஆய்வு செய்தார்.


ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டைஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டைஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.1.55 கோடி பதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

சிங்கம்பேட்டை, அனந்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் சிம், ரூ.12.58 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பள்ளி சீரமைப்பு பணியிளையும், ஒலகடம் ஊராட்சியில், அம்ரூத் திட்டத்தின் கீழ், ரூ.18.00 இலட்சம் மதிப்பீட்டில் நாகிரெட்டிபாளையம் குளம் சீரமைப்பு பணிகளையும் , அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.31.18 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் என மொத்தம் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொமண்டு பணிகளை விரைவாக முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஒலகடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் உள்நோயாளிகள் புறநோயாளிகள் உள்ளிட்ட பதிவேடுகளையும், மருந்துகளின் இருப்பு குறித்து, அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Tags

Next Story