கிள்ளியூரில் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள் ஆய்வு

கிள்ளியூரில் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள் ஆய்வு

கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம். மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.


கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம். மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர் தாலுகாவில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டம் இன்று தொடங்கி யது. தொடர்ந்து நாளை 20 ம் தேதி காலை 9 மணி வரை நடக்கிறது. இதனை யொட்டி கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் கிள்ளியூர் தாலுகாவில் முகாமிட்டுள்ளனர்.இந்நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து முதல் நிலை அலுவலர்களும் பங்கேற்று வருகின்றனர்.

அரசால் நிறைவேற்றப்பட்டு வரும் முக்கியமான திட்டங்கள், அரசு அலுவலகங்கள், பணி கள் ஆகியவற்றைகலெக்டர் ஆய்வு செய்து வருகிறார்.இன்று மாவட்ட கலெக்டர் பிற்பகல் 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை கிள்ளியூர் தாலுகாஅலுவலகத்தில் வைத்து பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தும், கோரிக்கை கள் ஏதும் இருப்பின் அதனைக் கேட்டு நிறைவேற்றிட உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு அறிவுரைகள் வழங்க உள்ளார்.

Tags

Next Story