திண்டுக்கலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவில் உள் வளாகத்தில் உள்ள அப்பளம், மிளகாய் பஜ்ஜி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சுகாதாரமற்ற முறையில் பூஞ்சைகள் மற்றும் புழுக்களுடன் காலிபிளவர் மற்றும் திறந்த நிலையில் மசாலா பொடிகள் கெட்டுப்போன உருளைக்கிழங்கு,அழுகிய நிலையில் வெள்ளைபூண்டு சுகாதாரமற்ற முறையில் இருப்பிடம் இருந்தது. இவ்வாறு ஆய்வில் தெரிய வர மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரியிடம் மூன்று கடைகளை பூட்டி சீல் வைக்கும் படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி உத்தரவிட்டார்.

Tags

Next Story