உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மக்களை நாடி குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீா்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் புதன்கிழமை (ஜூன் 19) மாவட்ட ஆட்சியா் மற்றும் அரசு அலுவலா்களால் பல்வேறு வளரச்சிப் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டம் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தினை செயலாக்கும் நோக்கில் வரும் 19-ஆம் தேதி (புதன்கிழமை) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் மற்றும் அனைத்து துறை அலுவலா்களால் செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாயவிலைக் கடைகள், பள்ளிகள் மற்றும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் ஆய்வு செய்யப்படும். இந்த நிகழ்வின் காட்டாங்கொளத்தூா், வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, தங்களது குறைகள், கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை அளித்தனர்.

Tags

Next Story