பெட்ரோல் பங்குகளில் அதிரடி சோதனை

பெட்ரோல் பங்குகளில் அதிரடி சோதனை

தஞ்சை மாவட்டத்தில் பெட்ரோல் பங்குகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.


தஞ்சை மாவட்டத்தில் பெட்ரோல் பங்குகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம்: தஞ்சை மாவட்டத்தில் பெட்ரோல் பங்குகளில் அதிரடி சோதனை. தஞ்சாவூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பெட்ரோல் பங்குகளில் வாகனங்கள் அல்லாத பிளாஸ்டிக் கேன் முதலியவற்றில் பெட்ரோல் கொடுக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் I.P.S உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் பெட்ரோல் பங்கிகளில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பட்டீஸ்வரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வலங்கைமான் மடாகுடி சிவசக்தி என்டர்பிரைசஸ் பெட்ரோல் பங்க் ஊழியர் மணிவண்ணன் மீது பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் விற்பனை செய்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்றும் ஒரத்தநாடு உட்கோட்ட வெட்டிக்காடு சில்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த முத்தையன் என்பவர் தனது பெட்டிக்கடையில் பெட்ரோலை சில்லறை விற்பனை செய்வது செய்ததற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டும் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது மேலும் தஞ்சை மாவட்டத்தில் பெட்ரோல் பங்குகளில் வாகனம் அல்லாது பிளாஸ்டிக் கேன் மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபடும் பொதுமக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பாக வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடப்படுகிறது.

Tags

Next Story