உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

ராமநாதபுரம் கீழக்கரையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் Dr.விஜயகுமார் தலைமையில் உணவக கடைகளின் ஆய்வு நடைபெற்றது. இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 12 உணவுகளுக்கு பள்ளி அருகே புகையிலை பீடி சிகரெட் போன்ற பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வில் கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் பரமக்குடி உணவு பாதுகாப்பு அலுவலர் கருணாநிதி ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர் கீழக்கரை நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் பரகத்துல்லா கீழக்கரை காவல் நிலைய காவலர் ராம்கி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story