காஞ்சிபுரம் மண்டலத்தில் அரசு பேருந்துகள் ஆய்வு
அரசு பேருந்தில் அதிகாரிகள் ஆய்வு
அரசு பேருந்துகளில் பராமரிப்பு பணி தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில், ஆய்வு செய்த போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி மற்றும் அதிகாரிகளுடன், தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, அரசு பேருந்துகளை ஆய்வு அறிக்கை அளிக்குமாறு போக்குவரத்து கழகங்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, தமிழம் முழுதும் உள்ள 312, அரசு போக்குவரத்து கழக பணிமனைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம்கோட்டம், மேலாண் இயக்குனர், கோட்டத்திற்கு உட்பட்ட பணிமனையில் உள்ள பேருந்துகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன்படி, காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளர் தட்சிணாமூர்த்தி அறிவுரையின்படி, மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பணிமனைகளிலும் உள்ள பேருந்துகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு,
அவற்றில் உள்ள பழுதுகள் நீக்கப்பட்டுள்ளது என, காஞ்சிபுரம் மண்டல போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.