தூத்துக்குடியில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய பொருட்கள் ஆய்வு

தூத்துக்குடியில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய பொருட்கள் ஆய்வு

அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய பொருட்களின் விவரங்கள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பாராளுமன்ற பொது தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும், வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய பொருள்களின் விபரங்கள் குறித்தும்,

தேர்தல் நாளன்று உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் அனைத்து அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

Tags

Next Story