நெல்லிக்குப்பம் பகுதியில் நகராட்சி ஆணையர் ஆய்வு

நெல்லிக்குப்பம் பகுதியில் நகராட்சி ஆணையர் ஆய்வு

மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை நகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிலையில் நகர பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தருவதை அடுத்து மேற்படி மருத்துவ மனையில் போதிய இடவசதி இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதனைத்தொடர்ந்து சுகாதார நிலையத்தை மேம்படுத்த அனைத்து கட்சி மற்றும் பொது நல கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.

மேற்படி சுகாதார நிலையத்தை பார்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் 1கோடியே 80லட்சம் ரூபாய்க்கு அருகில் இருந்த பள்ளி கல்வித்துறைக்கு சொந்தமான இடத்தை பெற்று கூடுதல் மருத்துவமனை கட்ட அனுமதி அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு சமன் செய்யும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து நகராட்சி ஆணையர் கிருஷ்ணராஜன், கவுன்சிலர்கள் சத்யா, ஃபாரூக், திமுக இளைஞரணி செயலாளர் சாமிநாதன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Tags

Next Story