தேர்தல் பொருட்களை பார்வையிட்டு தேர்தல் பொதுப்பார்வையாளர் ஆய்வு

தேர்தல் பொருட்களை பார்வையிட்டு தேர்தல் பொதுப்பார்வையாளர் ஆய்வு

 ஆய்வு

தர்மபுரி மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் தேர்தல் பொருட்களை தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் தேர்தல் பொருட்களை தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். தருமபுரி மாவட்டத்தில் இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தேர்தல் பொது பார்வையாளர் அருணா ரஜோரியா, மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி , ஆகியோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்குப்பதிவு அன்று பயன்படுத்தப்படும் வாக்காளர்பட்டியல், படிவங்கள், உறைகள், எழுது பொருட்கள் உள்ளிட்ட தேர்தல் பொருட்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர் .உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பிரகாசம், தனி வட்டாட்சியர்கள் (தேர்தல்) அசோக்குமார், வெங்கடேசன் உள்ளிட்ட தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story