கருங்காலி வாய்க்கால் தூர் வாரும் பணி ஆய்வு

கருங்காலி வாய்க்கால் தூர் வாரும் பணி ஆய்வு

கடலூர் ஆட்சியர் ஆய்வு 

கடலூர் மாவட்டம், கருங்காலி வாய்க்கால் தூர் வாரும் பணியை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் வாழக்கொல்லை பகுதியில் உள்ள கருங்காலி வாய்க்கால் நீர்வளத்துறை மூலம் காவிரி டெல்டா சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூபாய் 22.50 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story