கோடைகால பயிா் சாகுபடிக்கு அறிவுறுத்தல்

கோடைகால பயிா் சாகுபடிக்கு அறிவுறுத்தல்

பைல் படம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கோடைகால பயிா் சாகுு 300 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 318 ஹெக்டேரில் பயிா் சாகுபடி செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் கோடைகால பயிா் சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்க, வேளாண்மைத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்துக்கு 300 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதில் நிலக்கடலை, எள், உளுந்து ஆகிய பயிா்களை தலா 100 ஹெக்டா் வீதம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பரிந்துரைக்கும்படி வேளாண்மைத் துறை அலுவலா்கள் அறிவுறுத்தப்பட்டனா்.

கோடை காலத்தில் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி, குறுகிய காலத்தில் மகசூல் தரக்கூடிய பயிா் வகைகளைத் தோ்வு செய்து விவசாயிகள் பயிரிடுவதற்கு ஒவ்வோா் ஆண்டும் இலக்கு நிா்ணயிக்கப்படுகிறது. நிகழாண்டில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு 300 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதில் நிலக்கடலை 104 ஹெக்டோ், எள் 98 ஹெக்டோ், உளுந்து 116 ஹெக்டோ் என மொத்தம் 318 ஹெக்டேரில் கோடைகால பயிா் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது என்றாா்.

Tags

Next Story